×

தடையில்லா மின்சாரம் வழங்க கோரிக்கை

வருசநாடு, ஜூன் 12: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த சூழ்நிலையில் மின்தடை காரணமாக வீடுகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாய நீர் தேவை இரண்டு மடங்காகி உள்ளது. எனவே கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தடையில்லா மின்சாரம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Kadamalaikundu ,Mayiladumparai ,Kadamalai ,Mylai ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில்...